இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா ?
இவர்கள் எல்லாருக்கும் ஒரே சித்தாந்தமா ?
இவர்கள் எல்லாரும் தேர்தல் வரை ஒற்றுமையாக தொடர்வார்களா ?
இவர்களுக்குள்ளே மாநிலத்தில் பிரிவினைகள் உண்டே ?
இப்படி பல கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடும். அது எதுவும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரே ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவரின் எதிரி ஒருவர் தான். அதுவும் மோசமான, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என பார்ப்பனியத்திற்கு சொம்பு தூக்கும் மதவெறி ஒருவர் தான் இவர்களின் எதிரி.
இந்த பத்து ஆண்டுகளில் நாம் பின்னால் தள்ளி போயிருக்கிறோம். அவர்கள் சொல்லும் புள்ளிவிபரங்கள் எல்லாமே பொய் என அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்லுவார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவு, வாட்சப்பில் கதை சொல்லவும் தான் மூளை மழுங்கிய மத கூட்டம் இருக்கிறதே...
விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், டில்லி கல்லூரி மாணவர்கள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் போராட்டம் எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள்.
ஒரு ஆட்சியில் போராட்டம் நடப்பது என்பது இயல்பானது. ஆனால் அதனை அடக்க இந்த மூடர் கூடம் செய்யும், பேசும் விடயங்களை கவனியுங்கள். இவர்கள் நாட்டிற்கு எவ்வளவு பெரிய கேடு என்பது புரியும்.
தமிழ்நாட்டில் செந்தில்பாலாஜி, இப்போது பொன்முடி என விரட்டுகிறார்கள். ஆனால் யோசியுங்கள் இது வெறும் ஊழலா ? இல்லை அதிகார திமிரடி மிரட்டலா ? குட்கா வழக்கில் விரட்ட, தலைமை செயலகத்தில் மிரட்ட உடனே ஆட்சியாளரின் காட்சி மாறியது, உசூர் நான் உங்கள் அடிமை என்றார் ஒன்றிய அரசை நோக்கி. இதுற்கு தான் ஊழல் விரட்டல் அப்போது பயன்பட்டது. இதோ இப்போது சரத்பவார் குடும்ப மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரை அதிகார அமைப்புகள் மூலம் விரட்டி விசாரித்து அடிமையாக்கிவிட்டார்கள். இப்போது யார் மீது பல ஆயிரம்கோடி ஊழல் குற்றச்சாட்டு வைத்தார்களோ இன்று அவரே அங்கே நிதி அமைச்சராக இருக்கிறார். எனில் இது ஊழல் ஒழிப்பா இல்லை எங்கள் அதிகாரத்தை ஏற்றுக்கொள் இல்லை உன்னை என் அதிகார அமைப்புகள் மூலம் விரட்டுவேன் என்ற வெறி.
இதனை ஒவ்வொரு மாநில கட்சியும் எதிர்கொள்கிறது. இன்று ஊழலில் உற்றுக்கண்ணே பிஜேபி தான். இதோ கர்நாடகத்தில் அவர்கள் தோற்க அவர்கள் நடத்திய 40% ஊழல் தாண்டவமும், மத தாண்டவமும் தான் காரணம். ஆனால் அதற்காக மட்டுமே அதனை எதிர்க்கவில்லை. என் எதிர்கால சந்ததிக்கு இந்த மூடர்கூட பிஜேபி சொல்லும் இந்த இந்தியா வேண்டாம். இவர்கள் பேசும் மதவாத இந்தியா வேண்டவே வேண்டாம்.
இன்னும் காலமிருக்கிறது.
மிரட்டல் காட்சிகள் இருக்கிறது.
கலவரங்கள் இருக்கிறது.
நாடகங்கள் இருக்கிறது.
ஆனால் நாம் உரக்க சொல்லவேண்டியது ஒன்றுதான். இந்த பிஜேபியின், ஆர் எஸ் எஸின் பார்ப்பனிய ஏவல்களில் இருந்து விடுபட்ட இந்தியா வேண்டும். நமக்கு நேரு கனவு கண்ட காந்தி உருவாக்க நினைத்த இந்தியா வேண்டும். அதில் குறைகள் இருந்தாலும் நம் உரிமை இருந்தது. அதனை மட்டும் நினைவில் கொள்ளுவோம்...
கருத்துகள்
கருத்துரையிடுக